Monday, May 6, 2024
Home » பொது முகாமையாளர் பண்டார காலமானார்
ரயில்வே திணைக்களத்தின்

பொது முகாமையாளர் பண்டார காலமானார்

by Gayan Abeykoon
April 24, 2024 8:25 am 0 comment

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே. டபிள்யூ. பண்டார தனது 58 ஆவது வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று (23) அதிகாலை காலமானார். அநுராதபுரத்தில் நிகழ்வொன்றுக்காக இவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு திடீர் சுகயீனமடைந்தார். இதனைத் தொடர்ந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதே காலமானதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.   றேமண்ட் மலர்ச்சாலையில் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதுடன்,  இவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (25) மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT