இந்தியாவிலிருந்து மீண்டும் முட்டை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் முட்டையின் விலை அதிகரிக்காது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ளூர் உற்பத்தி முட்டைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன் அதன் விலைகள் சில வேளைகளில் அதிகரித்தும் குறைவடைந்தும் காணப்படும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சாதாரண விலையில் முட்டையை விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் முட்டையை மீண்டும் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்ர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, நாட்டில் முட்டையின் விலை 60 ரூபாவை விட அதிகரித்தது.இந் நிலையில் இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
தற்போது மேலும் ஒரு தொகை முட்டையை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்