Monday, May 6, 2024
Home » அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக சந்திரசேன

அநுராதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவராக சந்திரசேன

by Gayan Abeykoon
April 24, 2024 8:34 am 0 comment

அநுராதபுரம்  மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.  சந்திரசேன  (17)  நியமிக்கப்பட்டுள்ளார். இதன் போது வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகள், மாகாண பிரதம செயலாளர், அநுராதபுர மாவட்ட  செயலாளர் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களும்  கலந்து கொண்டனர்.

இதன் போது  உரையாற்றிய மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர; மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி பேசும் பிரதான குழுவான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் எஸ்.எம். சந்திரசேனவின் நியமனம் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெரும் உதவியாக அமையும் என்றும், முன்னாள் இணைத் தலைவராக இருந்து அண்மையில் காலம் சென்ற எச். நந்தசேன மாவட்டத்திற்கு ஆற்றிய கடமைகளை தொடர்ந்து  இவர் முன்னெடுத்துச் செல்வார் எனவும் அவர் தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவராக தெரிவு செய்யப்பட்ட எஸ்.எம்.சந்திரசேனவுக்கு ஒத்துழைப்பு வழங்கி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக   மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

திறப்பனை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT