தமிழ் சிங்கள புத்தாண்டு சம்பிரதாய கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு புதியதொரு அர்த்தத்தை கற்பிக்கும் வகையில், மக்கள் வங்கி காலம் காலமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வந்துள்ளதுடன், இம்முறையும் புத்தாண்டு கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு பல்வேறு பரிசுகளை ஏற்பாடு செய்துள்ளது.
மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தனிநபர் வங்கிச்சேவை) ரீ.எம்.டபிள்யூ. சந்திரகுமார இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
“இலங்கையில் சாமானிய மக்களுக்கும் வங்கிச்சேவை வசதிகள் கிடைக்கப்பெறச் செய்தல் வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கி, ஆரம்பத்திலிருந்தே மக்களுடைய சிந்தனைகளையும், விழுமியங்களையும் மதித்து செயற்பட்டு வந்துள்ளது. இலங்கையில் பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள் மற்றும் கலாசாரங்களுடன் பின்னிப்பிணைந்துள்ள மக்கள் வங்கி, இலங்கையில் வங்கித்துறையில் தமிழ் சிங்கள புத்தாண்டு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை 1973 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தி, இதனை முதலில் அறிமுகப்படுத்திய வங்கியாக சாதனை படைத்தது. அன்றுதொட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆண்டுதோறும் மக்கள் வங்கி இந்த புத்தாண்டு சம்பிரதாயத்தை தவறாது முன்னெடுத்து வந்துள்ளது. ” என்று குறிப்பிட்டார்.