102
கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு உற்பத்தித்திறன் விருத்தி தொடர்பான செயலமர்வு, அப்பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (27) நடத்தப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனியின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் வளவாளராக திருகோணமலை மாவட்டச் செயலக உற்பத்தித்திறன் திணைக்கள உத்தியோகத்தர் ஏ.நுஷ்ரி கலந்துகொண்டு விளக்கமளித்தார். கிண்ணியா பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜிப், கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கானுதீன் நிசௌஸ், பிரதேச செயலகத்தின் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட பலர் இச்செயலமர்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
கிண்ணியா தினகரன் நிருபர்