61
புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணியொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் நீண்ட நாட்களாகவே பொதுமக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.
இவ்வாறான நிலையில் இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
(மாங்குளம் குரூப் நிருபர்)