காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா நேற்று முன்தினம் புதன்கிழமை (27) மாலை விஜயம் செய்து, அங்குள்ள நிலைமையை கேட்டறிந்துகொண்டார்.
அலிசாஹீர் மௌலானா எம்.பி.யை காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி நிலையத் தலைவர் ஐ.எல்.உபைத் வரவேற்றதை தொடர்ந்து, சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அந்நிலையச் செயலாளர் எம்.எச்.எம்.புகாரி எடுத்துக்கூறினார்.
மேலும் அலிசாஹீர் மௌலானா எம்.பி.யிடம் கோரிக்கை அடங்கிய மகஜரையும் அந்நிலையத் தலைவர் உபைத் கையளித்தார்.
இதன் பின்னர் அந்நிலையத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்விலும் அலிசாஹீர் மௌலானா எம்.பி. கலந்துகொண்டார்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்