கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயம் மற்றும் கந்தளாய் ஆயிஸா பெண்கள் மகா வித்தியாலயத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் நேற்று முன்தினம் புதன்கிழமை (27) விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவ்வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாக அவ்வித்தியாலய அதிபர் தெரியப்படுத்தினார்.
இதேவேளை கந்தளாய் ஆயிஸா பெண்கள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியதாக, தௌபீக் எம்.பி. தெரிவித்தார்.
கந்தளாய் பள்ளிவாசல் சமாஜத் தலைவர் நஸார் மௌலவியின் தலைமையில் சகல பாடசாலை அதிபர்களும் இணைந்து உதவிக் கல்விப் பணிப்பாளர் நப்ரியின் வழிகாட்டலின் கீழ் இயங்கி வருகின்ற குழுவினரையே கந்தளாய் ஆயிஸா பெண்கள் மகா வித்தியாலயத்தில் தௌபீக் எம்.பி. சந்தித்தார்.