உலக காதிரிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்கூரிய மௌலானா அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யித் ஹபீபுத்தீன் அல் ஜீலானி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவர், அஷ்ஷெய்க் அப்துல் காதிர் அல்-ஜீலானி மற்றும் புனித நபியின் குடும்பத்தின் நேரடி வழித்தோன்றல் ஆவார்.
அவர் பாரம்பரிய இஸ்லாமிய மத மற்றும் சமூக அறிவியல் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மிகவும் மதிக்கப்படும் அறிஞர்களில் ஒருவருமாவார். ஷேக் ஹபீபுதீன் அல்-ஜீலானி, பாரம்பரிய இஸ்லாமிய சூபி போதனைகளுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றைப் பிரசாரம் செய்வதில் தனது நல்ல பணியை தொடர்கிறார், அமைதி மற்றும் அன்பின் செய்தியைப் பரப்புவதற்கான தனது முயற்சியில் உலகம் முழுவதும் பயணம் செய்து இஸ்லாமிய தஃவாத்துறையில் பாரிய பங்களிப்பும் செய்து வருகிறார்.
இவர் இன்று (29) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தெஹிவளை முஹியித்தீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலிலும் தராவீஹ் தொழுகையை கொழும்பு 03, மேமன் வரவேற்பு மண்டபத்திலும் நடத்த உள்ளார்.
ருஸைக் பாரூக்