Sunday, April 28, 2024
Home » காத்தான்குடியில் 100 குடும்பங்களுக்கு ஹாசிம் உமர் பௌண்டேஷன் உதவி
மீள மின்னிணைப்பு பெற

காத்தான்குடியில் 100 குடும்பங்களுக்கு ஹாசிம் உமர் பௌண்டேஷன் உதவி

by Gayan Abeykoon
March 29, 2024 1:49 am 0 comment

காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மின்சாரக் கட்டணம் செலுத்த வசதியின்றி மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட 100 குடும்பங்கள் மீண்டும் மின் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான உதவி, புனித றமழானையிட்டு இலங்கை ஹாசிம் உமர் பௌண்டேஷனின் மனிதாபிமான திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

100 வீடுகளுக்கு மீளவும் மின் இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக 10 இலட்சம் ரூபா செலவிடப்பட்டதாக, ஹாசிம் உமர் பௌண்டேஷன் தெரிவித்தது. ஹாசிம் உமர் பௌண்டேஷன் நிறுவுனர் புரவலர் ஹாசிம் உமரின் வழிகாட்டலின் கீழ் ஹாசிம் உமர் பௌண்டேஷன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பொறுப்பாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் மின் கட்டணம் செலுத்தப்பட்டது.

காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை, பூநொச்சிமுனை, மஞ்சந்தொடுவாய், காங்கேயனோடை ஒல்லிக்குளம், சிகரம், கீச்சான்பள்ளம், மண்முனை, பாத்திமாபுரம் போன்ற பிரதேசங்களில் வறுமைக் கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT