பதுளை ரோட்டரி கழகம் பதுளையில் தொழில்வாய்ப்பற்ற பெண்களுக்கு பற்றிக் தொழில்துறைக்கு வழிகாட்டும் வகையில் பயிற்சி வகுப்புகளை பதுளையில் நடத்தி வருகின்றது.
ரோட்டரி கழகத்தின் நிதி உதவி மற்றும் முழு ஆதரவுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பதுளை ரோட்டரி கழகமானது இத்திட்டத்தை மாவட்டம் முழுவதும் அறிமுகப்படுத்தி வேலையற்ற பெண்களுக்கு சுயதொழிலாக பற்றிக் தொழிலை அறிமுகப்படுத்தியுள்ளது. பற்றிக் தயாரிப்புகளை உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்துவதற்கும் உதவி வழங்கப்படவுள்ளது.
பதுளை ரோட்டரி கழகத்தின் தலைவர் சந்திம கருணாசேன, செயலாளர் மஹிந்த அபேகோன், பொருளாளர் ஜெயசூரிய டி சில்வா, பணிப்பாளர் சுஜீவ வெல்ஹேவேக மற்றும் ஏனைய அங்கத்தவர்கள் பற்றிக் பயிற்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
எம்.ஏ.எம்.ஹசனார்…
(ஊவா சுழற்சி நிருபர்)