202
நெல்லியடியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து 600 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
நெல்லியடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. அங்கிருந்து 600 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்.விசேட, கரவெட்டி தினகரன் நிருபர்கள்