நெஸ்லே லங்கா நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற மிகச் சிறந்த நிலைபேண்தகமை நிறுவனங்களுக்கான விருதுகள் 2023 நிகழ்வில் மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளது. மிகச் சிறந்த நிலைபேண்தகமை நிறுவனம் 2023 – மூன்றாம் இடம், மிகச் சிறந்த பத்து நிறுவனங்கள், துறைசார் விருது – உற்பத்தி, சுற்றுச்சூழல் மீதான அர்ப்பணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான மேம்பாடு ஆகியவற்றுக்கு இரு விருதுகள் அடங்கலாக பல்வேறு பிரிவுகளின் கீழ் ஐந்து விருதுகளை தனதாக்கியுள்ளது. இலங்கையின் அதியுச்ச வர்த்தகத்துறை கௌரவமாக பரவலாக கருதப்படுகின்ற மிகச் சிறந்த நிலைபேண்தகமை நிறுவனங்களுக்கான விருதுகளை இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்து வருவதுடன், மக்கள், பூமி மற்றும் இலாபம் ஆகியவற்றில் வலுவான கவனத்துடன் இயங்கி வருகின்ற நிலைபேண்தகமை பேண் முன்னணி செயல்பாட்டு நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தை வழங்கி வருகின்றது.
வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் நிலைபேற்றியலை உட்புகுத்தியுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், குடும்பங்கள், சமூகங்கள், மற்றும் பூமிக்கு நல்லதைச் செய்வதற்கு தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து பல்வேறுபட்ட மகத்தான முயற்சிகளை நெஸ்லே முன்னெடுத்து வருகின்றது. இலங்கைக்கு தொடர்ச்சியாக மற்றும் சாதகமான வழியில் வழங்கி வருகின்ற பங்களிப்புக்களுக்கான அங்கீகாரமாக, நாட்டிலுள்ள மிகச் சிறந்த 10 நிறுவனங்கள் மத்தியில் தற்போது ஒன்பதாவது ஆண்டாகவும் நெஸ்லே லங்கா இடம்பெற்றுள்ளது.