ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவுக்கு அருகே இருக்கும் இசையரங்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நால்வர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறைந்தது 137 பேர் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசுக் குழு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் டாலெர்ஸோன் மிர்ஸோயெவ், சாய்டாகிராமி முரோடாலி ராச்சாபாலிஸோடா, ஷாம்சிடின் ஃபாரிடுனி மற்றும் முகமது சோபிர் ஃபாய்ஸோவ் எனும் அந்த நால்வர் மீதும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டிருந்த இந்த நால்வரும் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது ரஷ்ய பாதுகாப்பு படையினர் கொடூரமான விசாரணை நடத்தும் வீடியோக்கள் கசிந்துள்ளன. இதில் ஒருவர் மின்சார அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நால்வரும் ரஷ்யாவில் வாழும் தஜிகிஸ்தான் குடிமக்கள் என்று ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. அவர்களில் மூவர் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற அறிக்கை குறிப்பிட்டது. நால்வரையும் மே 22ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் 7 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 6000 பேர் கூடியிருந்த அரங்கிற்குள் ஊடுருவிய தாக்குதல்தாரிகள் அங்கிருப்போர் மீது கண்மூடித்தனமாக சூடு நடத்திய இருப்பதோடு பெட்ரோல் குண்டுகளை வீசி அந்த அரங்கிற்கு தீ வைத்தனர்.