போதை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில், பொலிஸார் இருவர் காயமடைந்தனர். அன்புவழிபுரத்தில் இச்சம்பம் இடம்பெற்றது.காயமுற்ற பொலிஸ் சார்ஜன்ட் சத்தியசீலன் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ் டபிள் ஸ்ரீமாலி ஆகியோர் சிகிச்சைக்காக முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், முழங்காவில் அன்பு வழிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் சென்ற பொலிஸார் மீதே, இத்தாக்குதல் நடத்தப்பட்டது.தாக்குதலுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.இச்சந்தேக நபர்களிடமிருந்து 10,250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட் களும் மீட்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.