122
மூவரடங்கிய நீதிபதிகள் குழு முடிவு
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரை மற்றும் தேடுதலை செல்லுபடியற்றதாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ரிட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு, இவ்விடயங்களை ஆராய்ந்த பின்னர் நேற்று இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்