Thursday, May 9, 2024
Home » கலாபொக்க நெல்லிமலையில் உயிரிழந்த இருவருக்கு இழப்பீடு

கலாபொக்க நெல்லிமலையில் உயிரிழந்த இருவருக்கு இழப்பீடு

இ.தொ.கா. ஏற்பாடு

by Gayan Abeykoon
March 22, 2024 1:00 am 0 comment

கண்டியின் கலாபொக்க நெல்லிமலை தோட்டத்தில் உயிரிழந்த இரு தொழிலாளர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த உதவிக்காக இ.தொ.கா. வுக்கும்  இ.தொ.கா. உப தலைவரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தலைவருமான பாரத் அருள்சாமிக்கும் கலாபொக்க நெல்லிமலை தோட்ட  மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தொழில் செய்துகொண்டிருந்த போது நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட  திடீர் அனர்த்தத்தில் சிக்கி சண்முகம் விஜயலட்சுமி, ஸ்ரீகந்தராஜ் புவனேஸ்வரி ஆகியோர் கடந்த 2023 ஜூலை 6ஆம் திகதி  உயிரிழந்தனர்.

தொழில் செய்துகொண்டிருந்த போது, இத்தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்தமையால் இழப்பீட்டை பெற்றுக்கொடுக்க  இ.தொ.காவும் அதன் உபதலைவர் பாரத் அருள்சாமியும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT