153
பாலமுனை அல்–அறபா மற்றும் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டியில் அல்–அறபா அணி வெற்றியீட்டியது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் அல்–அறபா 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. அணித் தலைவர் எம்.எஸ். சஹான் அஹமட் இரு கோல்களையும் புகுத்தினார்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்