195
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழகத்தின் புகழ்பெற்ற செயலூக்க பேச்சாளர் பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணனின் சிறப்புரை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. ‘கற்க கசடற” என்ற தொனிப் பொருளில் ஆசிரியர்களை மையப்படுத்தி உரையை ஆற்றினார். நிகழ்வின் போது பேராசிரியர் ஜெயந்தசிறி பாலகிருஷ்ணன் கலாசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார். பேராசிரியருடன் அவரது கணவர் பேராசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு விழுப்புரம் ரோட்டரி கழக தலைவி விஜயகுமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(யாழ்.விசேட நிருபர்)