சுகாதார தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் இடையில் நேற்று முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சருக்கு விளக்கினர்
சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பில் பிரேரணையொன்றை தயாரித்து சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு, இதன்போது அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கோரிக்கைகளை பரிசீலித்து நியாயமான தீர்வை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறு சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இதற்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர், அந்தக் குழுவை நியமித்துள்ளதுடன் அந்தக் குழு இன்று (20) பிற்பகல் 3 மணிக்கு கூடி இது தொடர்பில் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)