சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் இதே பல்கலைக்கழகத்தின் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 13 மாணவர்கள் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மேற்படி 13 மாணவர்களும் குருவிட் ட சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களில் 4 மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பரீட்சை ஒன்றுக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மிகுதி 7 பேரும் பலாங்கொட நீதவான் ஹேஷானி றொட்றிகோ முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது இவர்களை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் நீதவான் விடுதலை செய்தார்.
இதன் பிறகு பகிடிவதை ,மாணவர் தாக்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது இல்லை என்ற நிபந்தனைகளுஹடன் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
கடந்த 9 ஆம் திகதி இப்பல்கலைக்கத்தின் ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்களும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் உணவு சாப்பிட்டவாறு இருந்த போது சில சிரேஷ்ட மாணவர்கள் சிற்றுண்டிச்சாலை விளக்குகளை அனைத்து இவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்