Tuesday, May 21, 2024
Home » கொழும்பு தாமரை கோபுரத்தில் திறக்கப்பட்ட பிக்சல் ப்ளூம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் திறக்கப்பட்ட பிக்சல் ப்ளூம்

- தெற்காசியாவின் முதலாவது 7 வித்தியாசமான புதிய டிஜிட்டல் கலை அனுபவம்

by Rizwan Segu Mohideen
May 10, 2024 1:40 pm 0 comment

Pixel Bloom (பிக்சல் ப்ளூம்), கொழும்பு தாமரை கோபுரத்தில் டிஜிட்டல் கலைப் படைப்புகளின் மூலமான புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது. இது தெற்காசியாவின் முதல் புத்தம்புதிய, ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை வழங்குகிறது.

இந்த தொலைநோக்கு பார்வையுடைய திட்டமானது, தொழில்நுட்பம் மற்றும் ஆக்கப்பூர்வமான படைப்புகளுக்கான தேசத்தின் கலங்கரை விளக்கமாக மாறுவதற்கான கொழும்பு தாமரை கோபுரத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. புத்தம் புதிய ப்ரொஜெக்ஷன் மேப்பிங் தொழில்நுட்பத்தை தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், பிக்சல் ப்ளூம் பார்வையாளர்களை பெளதீக மற்றும் டிஜிட்டல் உலகங்களுக்கு இடையே உள்ள எல்லைகளை மங்கலாக்கி அனுபவிக்க அழைக்கிறது.

இந்த முயற்சியின் மையப்பகுதியாக, கொழும்பு தாமரை கோபுரம் ஒரு நிறுவலை மட்டும் நடத்தவில்லை; பிக்சல் ப்ளூம் இலங்கையில் கலைப்படைப்புகளின் புதுமையின் மையமாக மாறி வருகிறது. இந்த லட்சியம் மிக்க முயற்சியானது, தொழில்நுட்பம் மூலம் கலை வெளிப்பாட்டை மேம்படுத்தும் ஒரு உயரிய படைப்புகளுக்கான நிலப்பரப்பை வளர்ப்பதற்கான கோபுரத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. பிக்சல் ப்ளூம் இலங்கை முழுவதும் புதுமையான கலைப் படைப்புக்களை உருவாக்கவான சூழலை ஊக்குவிக்கும் முயற்சியாகும்.

Bling Productions மற்றும் Eyeon உடனான கொழும்பு லோட்டஸ் டவரின் கூட்டாண்மை மூலம், ஆக்கப்பூர்வமான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் கலை படைப்புகள் மூலம் எதை அடைய முடியும் என்பதற்கான எல்லைகளை மறுவரையரை செய்ய அவர்கள் உறுதிபூண்டுள்ளனர். இந்தக் கூட்டுறவு படைப்பாற்றல் மற்றும் புதுமைகளின் முதன்மையான மையமாக கொழும்பு தாமரை கோபுரத்தின் நிலையை மென்மேலும் வலுப்படுத்தும் எதிர்கால திட்டங்களுக்கும் வழிவகுக்கும்.

ShakyaTM Studio, D4 என்போருடன் மற்றும் பல திறமையான இசைக்கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் டிஜிட்டல் கலைப் படைப்புகளின் நிலப்பரப்பை மறுவரையறை செய்து, Pixel Bloom அனுபவத்தை உயிர்ப்பித்துள்ளனர். நுட்பமான கைவினைத்திறன் மற்றும் உயர் தொழிநுட்பங்களின் உபயோகத்தின் மூலம், பிக்சல் ப்ளூம் பார்வையாளர்களை ஒளி மற்றும் ஒலி மூலம் உயினர்ப்பிக்கப்பட்ட ஓர் அற்புதமான பயணத்திற்கு அனைவரையும் வரவேற்கின்றது. இங்கு கலை தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைந்து புதிய தலைமுறைக்கான படைப்பாற்றலின் மாற்றும் சக்தியை நிலைநிறுத்துகிறது.

பிக்சல் ப்ளூம் ஏழு வித்தியாசமான அனுபவங்களைக் கொண்ட மனதை வசீகரிக்கும் உள்நுழையக் கூடியதான டிஜிட்டல் கலை படைப்பொன்றை உங்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது, ஒளி, ஒலி மற்றும் வர்ணங்களின் இணைத்தலின் மூலம் உருவாகும் படைப்புகளை ரசிக்க பங்கேற்பாளர்களை அழைக்கிறது.கொழும்பின் கதை மற்றும் அதன் அடையாளங்களிலிருந்து, பல விதமான ஊடாடும் டிஜிட்டல் மற்றும் உயர்தர கலை நிறுவல்கள் வரை, கொழும்பு தாமரை கோபுரத்தின் (Colombo Lotus Tower) கதை வரை, பிக்சல் ப்ளூம் மனித மனதின் படைப்பாற்றல் என வரையறுக்கக் கூடிய வரம்புகளை மீறுகிறது. பார்வையாளர்கள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இடங்கள் வழியாக செல்லும்போது, டிஜிட்டல் கலை மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் காட்சிப்பொருளை அனுபவிப்பர்.

பிக்சல் ப்ளூமின் நோக்கம், படைப்பாற்றலை ஊக்குவிப்பதாகும், இது பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி, கலை மற்றும் தொழில்நுட்பத்தின் வரம்பற்ற சாத்தியக்கூறுகளை ஆராய தனிநபர்களுக்கு ஊக்கமளிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

பிக்சல் ப்ளூமின் இயக்க மையத்தில் ஒரு இணையற்ற உணர்வுபூர்வமான பயணத்தை வழங்குவதற்காக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளது. EPSON லேசர் ப்ரொஜெக்டர்களால் இயக்கப்படும், இந்த நிறுவல் அதிநவீன மீடியா சர்வர்கள் (media servers) மற்றும் ஃபைபர் டேட்டா (fiber data) தொழில்நுட்பத்துடன் தடையற்ற தரவு பரிமாற்றம் மற்றும் அதி தெளிவான காட்சிகளை உறுதி செய்கிறது.

ஊடாடும் அனுபவங்களைச் செயல்படுத்தும் மோஷன் சென்சார்கள் (motion sensors) கொண்ட இவ் நிறுவலின் ஒவ்வொரு பகுதியும் தானியங்கக் கூடிய திறனுடன் நாள் முழுவதும் தடையின்றி செயல்படும் திறனும் கொண்டவாறு வடிவமைக்கப்பட்டு, Colombo Lotus Tower இன் பார்வையாளர்களை எதிர்காலத்தை போன்றதோர் அனுபவத்தில் மூழ்கடிக்கிறது.

மேலும், பிக்சல் ப்ளூமுக்காக தனிப்பயனாக்கப்பட்ட EX1 தன்னியக்க செயற்பாட்டுடனான ஒரு அதிநவீன கட்டுப்பாட்டு மையம் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது.

Artnet தொழிநுட்பம் சிக்கலான பிக்சல் விளக்குகளைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் DMX சிக்னல் அனைத்து ஒளிர்வு தொடர்பான அம்சங்களையும் நிர்வகித்து இவ் நிறுவலின் ஒவ்வொரு உறுப்புக்கும் துல்லியமான கணினிமயமாக்கப்பட்ட கட்டுப்பாட்டை வழங்குகிறது. உள்ளூர் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள், 3D கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள், டெவலப்பர்கள், ஆடியோ வல்லுநர்கள், ஒளி வடிவமைப்பாளர்கள் மற்றும் பலர் உட்பட பலதரப்பட்ட ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்களை Pixel Bloom ஒருங்கிணைக்கிறது. கருத்துருவாக்கம் முதல் செயல்படுத்துதல் வரை, பிக்சல் ப்ளூமினை உயிர்ப்பிக்க இக் குழு தடையின்றி ஒத்துழைக்கிறது. தொழில்நுட்ப வடிவமைப்பாளர்கள் இவ் அனுபவங்களை உருவாக்க தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களைப் பயன்படுத்தும், அதே நேரத்தில் இசைக்கலைஞர்கள் ஒட்டுமொத்த சூழலையும் உணர்வுகளையும் மேம்படுத்தும் வசீகரிக்கும் ஒலிக்காட்சிகளை உருவாக்குகின்றனர்.

கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை இவ் நிறுவலின் ஒவ்வொரு அம்சத்திலும் புகுத்துகிறார்கள், ஒவ்வொரு விவரமும் கலைநயம் எதிரொலிப்பதை உறுதி செய்கிறது. ஒன்றாக, இந்த பல்துறை குழுவானது, இலங்கையில் டிஜிட்டல் கலை வெளியில் ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்க சக்திக்கு Pixel Bloom ஒரு சான்றாக இருப்பதை உறுதி செய்கிறது.

பிக்சல் ப்ளூம், டிஜிட்டல் கலையின் வரம்பையும் தாக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை அறிவை மையமாக கொண்டிருக்கும் கல்வியால் இயங்கும் எதிர்காலத்தைத் தழுவுகிறது. இது STEAM கல்வியை – அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை & கணிதம் – படைப்பாற்றல் மற்றும் புதுமைக்கான ஊக்கிகளாகத் முன்னேற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளலை ஊக்குவிப்பதன் மூலம், உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக செயல்பட, டிஜிட்டல் கலைத்திறனின் எல்லைகளைத் தள்ளவும், புதிய சாத்தியங்களைத் தழுவவும் தனிநபர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிக்சல் ப்ளூம் பல உள்ளூர் மற்றும் சர்வதேச ஆக்கப்பூர்வ சிந்தனையாளர்களை எதிர்காலத்தில் திட்டத்தில் ஒத்துழைத்து டிஜிட்டல் கலை நிறுவலில் அவ்வப்போது புதிய அனுபவங்களை வழங்குவதோடு பார்வையாளர்களுக்கு அவர்களின் அடுத்த வருகையின் போது புதிய அனுபவத்தையும் வழங்கும்.

பிக்சல் ப்ளூமின் மாயத்தை நேரில் அனுபவித்து, உங்கள் உணர்வுகளை உயர்த்தி, உங்கள் கற்பனையைத் தூண்டும் பயணத்தைத் தொடங்குங்கள்.

மிக அழகான இயற்கைக்காட்சிகள், ஊடாடும் நிறுவல்கள் மற்றும் வசீகரிக்கும் கதைகள் ஆகியவற்றை அனுபவிப்பதில் எங்களுடன் இணையுங்கள். பிக்சல் ப்ளூம் மூலம் எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்கவும், இந்த உன்னதமான அனுபவத்தினை ரசிக்க உங்கள் புலன்கள் உங்களை வழிநடத்தட்டும். பிக்சல் ப்ளூம் டிஜிட்டல் கலையின் அதிசயத்தைப் பார்க்க, உணர, உங்களை அழைக்கிறது.

இது தொடர்பில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவிக்கையில், “நாங்கள் கொழும்பு தாமரை கோபுரத்தில் பிக்சல் ப்ளூம் டிஜிட்டல் கலை அருங்காட்சியகத்தை திறந்து வைப்பதுடன், அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் அனுபவித்து மகிழக்கூடிய புத்தம்புதிய டிஜிட்டல் கலையின் படைப்புகளை உருவாக்கும் முன்னோடியாக ஆவதை கொண்டாடுகிறோம்” என்றார்.

வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் Bimsara Rozairo தெரிவிக்கையில், “வளர்ந்து வரும் டிஜிட்டல் சகாப்தத்தில் நாம் முன்னேறி வரும் நிலையில், தெற்காசியாவில் முதன்முறையாக புத்தம்புதிய மற்றும் ஊடாடும் டிஜிட்டல் கலை படைப்புகளை கண்டுகளிக்கக் கூடிய தொழில்நுட்பத்தை நாங்கள் வழங்குவதன் மூலம், கொழும்பு தாமரை கோபுரம் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக இருப்பதை உறுதி செய்கின்றோம்.” என்றார்.

இது தொடர்பில் பிளிங் புரொடக்ஷன்ஸ் நிறுவுனர் மார்லன் ஜேசுதாசன் தெரிவிக்கையில், “இது கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிர்ப்பிக்கப்பட்ட மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டம் ஒன்றாகும்.” என்றார்.

பிக்சல் ப்ளூம் செயல்படும் நேரங்கள்

  • வார நாட்களில்: மு.ப. 9.00 முதல் இரவு 9.00 வரை
  • வார இறுதி நாட்கள்: மு.ப. 9.00 முதல் இரவு 10.00 வரை

பிக்சல் ப்ளூம் டிக்கெட் விலைகள்

  • உள்ளூர் பார்வையாளர்களுக்கு: ரூ. 350
  • வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு
  • வயது வந்தோர்: 20 டொலர்
  • சிறுவர்ககள்: 10 டொலர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT