திருகோணமலை மாவட்ட ‘Trincomalee Super 40’ கிரிக்கெட் கழகத்தின் ஏற்பாட்டில் ‘Battle of East – 2024’ ற்கான இரண்டாவது மென்பந்து சுற்றுப் போட்டி கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் திருக்கோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில். மார்ட்டீன் G.ஜெயகாந்த் தலைமையில் நடைபெற்றது.
‘Trincomalee Super 40’ மற்றும் ‘Batticaloa Masters’ ஆகிய கழகங்களுக்கிடையில் இரண்டு நாட்களில் 20 க்கு 20 ஓவர்கள் என்ற அடிப்படையில் இவ்விரு போட்டிகள் நடாத்தப்பட்டதோடு அப்போட்டிகளில் இவ்விரு அணியினரும் இரண்டிற்கு இரண்டு என்ற அடிப்படையில் வெற்றிகளை தமதாக்கிக்கொண்டு சம்பியன் பட்டத்தை சமமாக பகிர்ந்துகொண்டனர்.குறித்த சுற்றுப்போட்டியின் இறுதிநாள் (11) நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டு வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
(படம் : தம்பலாகாமம் குறூப் நிருபர்)