விபூதிப் புதன் கத்தோலிக்க மக்களால் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான தினமாகும். இதை சகோதரத்துவத்தின் நாள் என்றும் சொல்லலாம். அனைத்து மதங்களின் தத்துவத்திலும் இருக்கும் நிலையாமையை உணர்ந்து இறைவனில் இணைய அழைப்பதை விபூதிப் புதன் கிறிஸ்தவத்திலும் வலியுறுத்துகிறது. கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் என்பது இந்த விபூதி தினத்திலிருந்தே தொடங்குகிறது.
தவக்காலம் என்பது கடந்தகாலத்தில் செய்த தவறுகளை உணர்ந்து நம்மை நாமே தூயமனிதர்களாகத் தயார் செய்துகொள்ள கடவுளால் தரப்பட்டிருக்கும் காலமாகும்.
விபூதிப் புதனன்று ஆலயத்துக்கு வரும் ஒவ்வொரு பக்தரின் நெற்றியிலும் “மகனே/மகளே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதை மறவாதே” என்று கூறி குருவானர் சாம்பலினால் சிலுவை அடையாளம் வரைகிறார்.
நம்முடைய எண்ணம், சொல், செயல் மற்றும் வாழ்க்கையை தூய்மைப்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் நாம் அனைவரும் பரிசுத்த ஆவியின் ஆலயம் (10 காரி 3:17) என்று தூய பவுல் அடியார் கூறுகிறார். கடவுள் வாழும் இல்லமாக திகழும் நாம் எப்பொழுதும் தூய்மையாக இருக்க வேண்டும். தமது வாழ்வையும் வீட்டைப் போல், அலுவலகம் போல் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான அருளையும் கொடையையும் கொடுக்கின்ற காலம்தான் இந்தத் தவக்காலம். எனவே இந்த தவக்காலம் நம்முடைய வாழ்வை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த காலமாகிறது. கடவுள் நமக்கு 10 கட்டளைகளைக் கொடுத்துள்ளார். இந்தக் கட்டளைகள் நம்மை பயமுறுத்தவோ அல்லது நம்மை அடக்குவதற்காகவோ அல்ல, மாறாக நம்மை பாவ வாழ்க்கையிலிருந்து, ஆன்மீக இருளில் இருந்து தூய்மைப்படுத்துவதற்காக ஆகும். நம்முடைய வாழ்க்கையை தூய்மைப்படுத்தி கடவுள் வாழும் இல்லமாக மாற்ற இந்த 10 கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றில் மூன்று கட்டளைகள் வருமாறு:
நம்மைப் படைத்து வழிநடத்தும் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள். அவருடைய பெயரையும் நாட்களையும் தகுந்த முறையில் மதிக்க வேண்டும். அதனைப் பபயன்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. நான்காவது கட்டளை நம்முடைய பெற்றோர்களை நாம் தகுந்த முறையில் மதிக்க வேண்டும் என அழைப்ப விடுக்கிறது.
ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய கட்டளைகள் நாம் வாழும் இந்த சமுதாயத்தில் மற்றவர்களைப் புண்படுத்தாத படி வாழ வேண்டும் என்றும் உண்மை பேச வேண்டும் என்றும் மற்றவர்களின் பெயரைக் கெடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒழுங்கான திருமண வாழ்க்கை முறை போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றது.
அடுத்த இரண்டு கட்டளைகள் நாம் நமக்கு அடுத்திருப்பவர்களுக்குச் சொந்தமானவர்களையும் உடைமைகளையும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்று நம்மை அழைக்கின்றது.
இவ்வாறாக இந்தப் பத்து கட்டளைகளும் இயேசு கொடுத்த இரண்டு கட்டளைகளில் அடங்கும். அதாவது கடவுளையும் நம் அயலாரையும் அன்பு செய்ய வேண்டும் என்ற கட்டளையைப் பின்பற்றும் போது நம்மிடத்தில் இருக்கிற பாவஅழுக்கையும் ஆன்மீக இருளையும் அவற்றி தூய்மையான கடவுள் வாழும் இல்லமாக நாம் மாற முடியும்.
அதற்கு உகந்த காலமாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம்.
பகைவரை அன்பு செய். தன் சகோதரர் சகோதரிகள் மீது சினங்கொள்கிறவன் தண்டனைத்
தீர்ப்புக்கு ஆளாவர் (மத்த:22) என்ற கூறிய இயேசு மிகுந்த கோபப்படுகிறார். ஏனெனில் இயேசுக்கிறிஸ்து இறைவாக்கினர் போன்று கோயிலையும் ஆன்மீக வாழ்வில் இருக்கும் இருளையும் தூய்மைப்படுத்துகின்றார். எருசலேம் கோயிலையும் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற நிலையில் இருந்தார்.
நம்முடைய நிலையில் மாற்றம் அவசியம். நம்முடைய எண்ணம் சொல், செயல் மற்றும் வாழ்க்கையையும் தூய்மைப்படுத்த வேண்டிய நிலையில் அதற்கு உகந்த காலமாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்துவோம்.
அம்புறோஸ் பீற்றர் மறையாசிரியர், பிரான்ஸ்