Monday, April 29, 2024
Home » தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் ஒரு நாளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

தாய்லாந்து பிரதமரின் இலங்கை விஜயம் ஒரு நாளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

by sachintha
February 2, 2024 8:18 am 0 comment

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக விஷேட சர்வதேச அதிதியாக வருகை தரும் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினின் இரண்டு நாள் இலங்கை விஜயம் திடீரென அவருக்கு ஏற்பட்டுள்ள சுகவீனம் காரணமாக ஒரு நாள் விஜயமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து பிரதமர் சுதந்திர தின விழா நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன, மத பேதங்களின்றி உலகின் முன்னிலையில் இலங்கையை சிறந்த முறையில் முன்னேற்றும் வகையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் சிறந்த சகவாழ்வை கட்டியெழுப்பும் வகையில் இலங்கை மற்றும் தாய்லாந்துக்கிடையில் இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளமை அவரது வருகையின் முக்கிய நோக்கமாகும் என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT