149
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடினார். இசந்திப்புக் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள தரனுடனான சந்திப்பு ஒரு பயனுள்ளதாக அமைந்தது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்திற்குள் காணப்படும் முக்கிய விடயங்கள் குறித்து நாம் கலந்துரையாடினோம்.இவ்வாறு பிரித்தானிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.