Saturday, April 27, 2024
Home » யாழில் மகாத்மா காந்தியின் 76ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள்

யாழில் மகாத்மா காந்தியின் 76ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள்

by mahesh
January 31, 2024 1:15 pm 0 comment

மகாத்மா காந்தியின் 76 வது சிரார்த்த தின நிகழ்வுகள் யாழ்ப்பாண நகரில் நேற்று நடைபெற்றது. யாழ்.இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் காந்தி சேவா நிலையத்தினரின் அனுசரணையுடன் ஆஸ்பத்திரி வீதியிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது

இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், யாழ்.மாநகர சபை ஆணையாளர், காந்தி சேவா நிலைய உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

காந்தியம் காலாண்டு பத்திரிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது. பத்திரிகையை யாழ்.இந்திய துணைத் தூதரக அதிகாரி வெளியிட்டு வைக்க யாழ்.மாநகர சபை ஆணையாளர் பெற்றுக் கொண்டார்.

(யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT