பேருவளை, சீனன்கோட்டை அல் ஜாமிஅதுல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் 2024ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதியும் ஆண்டிறுதிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் வழீபா யாக்கூத்தியா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசளிப்பு வைபவம் மற்றும் பெற்றோர் ஒன்று கூடலும் கலாபீட பாஸிய்யா மண்டபத்தில் நடைபெற்றது.
கலாபீட பணிப்பாளர் மெளலவி எம் ஜே எம் பஸ்லான் அஷ்ரபி – பீ ஏ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாபீட அதிபர் மெளலவி அஸ்மிகான் (முஅய்யிதி) வரவேற்புரை நிகழ்த்தினார்.
இவ் வைபவத்தில் சங்கைகுரிய அஷ்ஷெய்க் ஸகி அஹ்மத் (எம் ஏ) பின் அஷ்ஷைக் காலிப் அலவி ஹாஜியார் அலவிய்யதுல் காதிரி விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
கலாபீட போதனாசிரியர்களான மெளலவி முஹம்மத் ஹாதிக் (பஹ்ஜி), மெளலவி முஹம்மத் (முஸ்தபவி), மெளலவி அகீல் (ஹஸனிய்யுல் காதிரி) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கலாபீட இணைப் பொருளாளர்களான முஸ்னி உவைஸ், மிஸ்ராஜ் மதீன், உறுப்பினர்களான பீ எம் முக்தார், ரியாஸ் பாஸி , எம் ஆர் ஷாஜஹான் மற்றும் சீனன் கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.