115
சமத்துவ மக்கள் நல ஒன்றியம், அஹிம்சா நிறுவனத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பமொன்றுக்கு வீடொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றதுடன், உரிய குடும்பத்தினரிடம் வீடு கையளித்து வைக்கப்பட்டது.
இந்த வீட்டுத் திட்டமானது, மட்டக்களப்பு அஹிம்சா நிறுவனத்தினுடைய வீடமைப்புத் திட்டத்தின் 71ஆவது வீடாகும்.
இந்நிகழ்வில் வந்தாறுமூலை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகரன், அஹிம்சா நிலைய தலைவர் வீ.விஜயராஜா உட்பட சமூக மேம்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாளிகைக்காடு குறூப் நிருபர்