பெலியத்தவில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் காலி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது, சந்தேகநபர்களிடமிருந்து 9.3 கிராம் ஹெரோயின், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், அவர்களது 3 கையடக்கத் தொலைபேசிகள், கூரிய ஆயுதமொன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (22) காலை 8.30 மணியளவில் பட்டப்பகலில் இடம்பெற்ற இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது.