தியத்தலாவையில் ‘Fox Hill Super Cross 2024’ பந்தயக் கார் போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு இழப்பீடுகளை வழங்கியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவரையில் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
தியத்தலாவையில் இடம்பெற்ற இந்த கார் பந்தயத்தின் போது பார்வையாளர்கள் மீது கார் மோதியதில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.