Saturday, May 18, 2024
Home » அம்பாறை – கல்ஓயா பாலத்துக்கருகே 02 பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து

அம்பாறை – கல்ஓயா பாலத்துக்கருகே 02 பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து

மாணவர்கள் உட்பட 30 பேர் காயம்

by mahesh
May 4, 2024 11:00 am 0 comment

அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில், அம்பாறை – கல்ஓயா பாலத்துக்கு அருகில் நேற்று (03) மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்றும் பாடசாலை சேவை பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT