Saturday, April 27, 2024
Home » முதலையின் தாக்குதலில் சிறைச்சாலை கைதி காயம்

முதலையின் தாக்குதலில் சிறைச்சாலை கைதி காயம்

by Gayan Abeykoon
January 25, 2024 8:53 am 0 comment

நுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதி ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.  

மேற்படி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு முதலையின் தாக்குதலுக்குள்ளாகி உள்ளார்.

சிறைச்சாலை வளாகத்தில் மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் பாதிக்கப்பட்ட கைதியுடன் மற்றும் சிலர் கடந்த (22) பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தபோது மூங்கில் புதருக்ளுள் மறைந்திருந்த முதலை ஒன்று கைதியின் காலை பிடித்து இழுத்துச் சென்றதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு கை , கால் , மற்றும் கழுத்து பகுதியில் காயம் அடைந்த கைதி, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் 11ம் வார்டில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை

மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

(திறப்பனை தினகரன் நிருபர் )

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT