Sunday, May 5, 2024
Home » சோதனையிடச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்; பெண்ணொருவர் கைது
யுக்திய நடவடிக்கையின்போது;

சோதனையிடச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்; பெண்ணொருவர் கைது

by Gayan Abeykoon
January 25, 2024 8:54 am 0 comment

பொலன்னறுவை வெலிகந்த  பகுதியில் யுக்திய  நடவடிக்கைக்காக  சோதனை செய்யச்சென்ற வெலிகந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்  இருவரை  போத்தலினால்  தாக்கிய பெண்ணை  பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகந்த கடவதமடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய உக்குங்  அக்கா என்ற பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனை நடவடிக்கைக்காக வெலிகந்த பகுதிக்கு சென்றிருந்தபோது சந்தேக நபர் போத்தலை உடைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் வலது மற்றும் இடது கையில் பலமாக தாக்கியுள்ளார்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோத்தர்கள் பொலன்னறுவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT