பொலன்னறுவை வெலிகந்த பகுதியில் யுக்திய நடவடிக்கைக்காக சோதனை செய்யச்சென்ற வெலிகந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை போத்தலினால் தாக்கிய பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகந்த கடவதமடுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய உக்குங் அக்கா என்ற பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனை நடவடிக்கைக்காக வெலிகந்த பகுதிக்கு சென்றிருந்தபோது சந்தேக நபர் போத்தலை உடைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் வலது மற்றும் இடது கையில் பலமாக தாக்கியுள்ளார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோத்தர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
(அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்)