மூத்த கவிஞரும் ஓய்வுநிலை ஆசிரியருமான கலாபூசணம் யோனகபுர ஹம்ஸாவின் ‘ விளக்கே நீ விளக்கு ‘ கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி, புதன்கிழமை, திக்குவல்லை மின்ஹாத் தேசிய பாடசாலை மஹ்மூத் மண்டபத்தில் மு.ப. 9.00 மணிக்கு நடைபெறும்.
தென் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மஷாயிர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், முன்னாள் தென் மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே. முஹம்மது, எழுத்தாளர் திக்குவல்லை கமால், ஹமீத் அல் ஹுஸைனியா அதிபர் எம்.ஆர்.எம். ரிஸ்கி, செய்யது இஸ்மாயில் இமாம் ஆகியோர் உரையாற்றுவர்.
எழுத்தாளர் திக்குவல்லை சப்வான் கவிவாழ்த்து நிகழ்த்துவார்.
அல்ஹாஜ் எம்.எச்.எம்.நஸார் முதற் பிரதியைப் பெற்று நூல் ஏற்பை ஆரம்பித்து வைப்பார். வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம். அஸ்வான் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து தொகுத்தளிப்பார்.