Saturday, April 27, 2024
Home » கிண்ணியாவில் நடமாடும் சேவை

கிண்ணியாவில் நடமாடும் சேவை

by Gayan Abeykoon
January 18, 2024 1:00 am 0 comment

ஜனாதிபதியின் சிந்தனையில் உருவான ‘புதிய நாடு புதிய கிராமம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் நடமாடும் சேவையொன்று நேற்று கிண்ணியா பிரதேசத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரின் அறிவுரைக்கமைவாக, கிண்ணியா பிரதேச செயலாளரின் தலைமையில் உப்பாறு மற்றும் பைசல் நகர் ஆகிய கிராம சேவகர் பிரிவு மக்களுக்காக இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்ற மூன்றாவது நடமாடும் சேவையாகும்.

இதில் மக்களுக்கான தேவைகளான வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தேசிய அடையாள அட்டை, காணி, முதியோர் மற்றும் பொலிஸ் சான்றுப் பத்திரம் பெறுதல் தொடர்பான ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் எம்.எச். முகமது கனி தெரிவித்தார்.

(கிண்ணியா மத்திய நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT