ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை ஆர்ஜன்டீன முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
இன்டர் மியாமி அணியைச் சேர்ந்த மெஸ்ஸி, மான்செஸ்டர் சிட்டியின் ஏர்லிங் ஹாலன்டை பின்தள்ளியே இந்த விருதை வென்றதோடு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் முன்கள வீரர் கைலியன் ம்பப்பே மூன்றாவது இடத்தை பெற்றார்.
36 வயதான மெஸ்ஸி 2023 ஆம் ஆண்டை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன் ஆரம்பித்தபோதும் ஜூன் மாதத்தில் இன்டர் மியாமி கழகத்தில் இணைந்தார். அவர் இதற்கு முன்னர் 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளிலும் பிஃபாவின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
பிரான்ஸின் லீக் 1 சம்பியன் கிண்ணத்தை வென்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக ஒன்பது கோலை புகுத்திய மெஸ்ஸி, பின்னர் அமெரிக்காவின் முதல் லீக் கிண்ணத்தை வென்ற இன்டர் மியாமி அணிக்காக ஏழு போட்டிகளில் 10 கோல்களை புகுத்தி இருந்தார்.
பிஃபாவின் 2023ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை ஸ்பெயினின் உலகக் கிண்ண வெற்றியாளர் அய்தானா பொன்மாத்தி தட்டிச் சென்றுள்ளார்.