– 1 பந்து மீதம்; கடைசி ஓவரில் வெற்றி
– தொடர் 1 – 1 என சமனிலை
– தீர்க்கமான 3ஆவது போட்டி ஜனவரி 18 இல்
இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் சிம்பாப்வே அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய தினம் (16) ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத் தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க 69 ஓட்டங்களையும், அஞ்சலோ மெதிவ்ஸ் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் essing Muzarabani மற்றும் Luke Jongwe ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அந்த வகையில் 174 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இறுதி ஓவரில் 20 ஓட்டங்கள் பெற வேண்டி இருந்த நிலையில் 1 பந்து மீதமிருக்க சிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.
சிம்பாப்வே அணி சார்பில் Craig Ervine 70 ஓட்டங்களையும், Luke Jongwe மற்றும் Brian Bennett ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷண மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அந்த வகையில் 3 போட்டிகள் கொண்ட இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ரி20 தொடர் 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.
தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 3 ஆவது போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (18) இடம்பெறவுள்ளது.