Thursday, May 9, 2024
Home » நெற்செய்கைக்கு ட்ரோன்களை பயன்படுத்தும் வேலைத்திட்டம்

நெற்செய்கைக்கு ட்ரோன்களை பயன்படுத்தும் வேலைத்திட்டம்

by sachintha
January 12, 2024 9:02 am 0 comment

நெற்செய்கைக்கு ட்ரோன்களை பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டம், இந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நெற்செய்கை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாய சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ட்ரோன் வீதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு நூறு ட்ரோன்கள் வழங்கப்படவுள்ளன. இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் 563 விவசாய சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ஆளில்லா விமானத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT