இன்று (05) அதிகாலை முடிவடைந்த கடந்த 24 மணிநேர யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுக்காக 1184 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 1184 சந்தேக நபர்களில் 59 சந்தேகநபர்கள் மீது தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளது.
23 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
போதைப்பொருளுக்கு அடிமையான 49 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பட்டியலில் இருந்த 93 சந்தேக நபர்கள் நேற்றைய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது,
337 கிராம் 758 மில்லிகிராம் ஹெரோயின்
242 கிராம் 372 மில்லிகிராம் ஐஸ்
06 கிலோகிராம் கஞ்சா
7,772 கஞ்சா செடிகள்
03 கிலோகிராம் 694 கிராம் மாவா
55 கிராம் ஹஷீஸ்
1,221 போதை மாத்திரைகள்
1 கிலோ 226 கிராம் குஷ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.