Saturday, April 27, 2024
Home » லிந்துலை லயன் குடியிருப்பில் தீ விபத்து; 3 வீடுகள் முற்றாக தீக்கிரை

லிந்துலை லயன் குடியிருப்பில் தீ விபத்து; 3 வீடுகள் முற்றாக தீக்கிரை

by Prashahini
January 4, 2024 9:49 am 0 comment

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (04) அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

9 ஆம் இலக்கம் லயன் குடியிருப்பிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 லயன் அறைகள் குறித்த நெடுங்குடியிருப்பு தொகுதியில் இருந்துள்ளன.

பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தீ விபத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதோடு, சொத்துகளும் சேதம் அடைந்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT