Home » நாட்டில் சுபீட்சமான வாழ்வு உருவாக பிரார்த்திக்கிறேன்

நாட்டில் சுபீட்சமான வாழ்வு உருவாக பிரார்த்திக்கிறேன்

by damith
January 1, 2024 5:58 am 0 comment

பிறந்துள்ள 2024ஆம் புத்தாண்டில் எமது நாட்டு மக்கள் தற்போது எதிர் கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு சுபீட்சமான வாழ்க்கை உருவாக தாம் பிரார்த்திப்பதாக லங்கா சமசமாஜக்கட்சி பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது பாமர மக்கள் பசி பட்டினியை எதிர்நோக்குகின்றனர். அரசு அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மக்கள் மீது வரியை சுமத்தி பொருளாதாரத்தை சீர்செய்ய அரசு முயற்சி செய்கின்றது.

எமது கட்சி தமிழ் மக்களுக்கு அதிகார பரவலாக்கப்பட வேண்டும். பொலிஸ், காணி அதிகாரங்களும் அதில் உள்வாங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு பிறக்கும் புத்தாண்டில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT