பேருவளை நூன் கல்வி கூடத்தில் அரபு எழுத்தணி கலையினை (Arabic calligraphy) பூர்த்தி செய்த முதற் கட்ட மாணவர்களின் அரபு எழுத்தணி கண்காட்சியொன்று அண்மையில் பேருவளை நூன் கல்விக்கூட மண்டபத்தில் கல்விக்கூட அரபு எழுத்தணி ஆசிரியர் அமீர் பைசலின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது.
காதிரியத்துன் நபவிய்யா தரீக்காவின் சங்கைக்குரிய சேஹ்நாயகம் இக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
ஆரம்ப நிகழ்வில் நபவிய்யா ஊடக பொறுப்பாளர்கள் மற்றும் நூன் கல்வி கூடத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பேருவளை பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் உலமாக்கள் மற்றும் பிரதேசத்தை சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் இக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
மேலும் பிற மாகாணங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் (பிற மதத்தவர்கள் உட்பட) இக் கண்காட்சியில் கலந்து சிறப்பித்தனர்.