142
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேச செயலகம் நடத்திய இலக்கிய போட்டியில், வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.நிரோஜினி தவநீதன்,நிகழ்வை ஒருங்கமைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ,கந்தவனம் சதிசேகரன் மற்றும் இலக்கிய போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
(காரைதீவு குறூப் நிருபர்)