81
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் கடந்த 12 வருடங்களாக கணித, விஞ்ஞான ஆசிரியராகவும் கல்லூரியின் ‘தமிழ் அமுதம்’ சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றிய ஆசிரியர் யாழ் அஸீம், விஞ்ஞான ஆசிரியர்களாக கடமையாற்றிய ஏ.எல்.எம். நிப்ராஸ், எம்.எப்.எப். ரில்வானா ஆகியோரது பிரியாவிடை வைபவம் கடந்த (20) கல்லூரியின் அப்துல்கபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி அதிபர் எம்.சாதுலி, தமிழ் பிரிவின் உப அதிபர் ஏ.எம். மிஹ்ழார், தமிழ் பிரிவின் பகுதி தலைவிகளான ஷாமிலா முனாஸ், எம்.பிஷ்ரின் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.