தோப்பூர் பிரதேசத்தில் அமைந்துள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளில் சேவை பெறுவதற்காக நாளாந்தம் அதிகளவான பொதுமக்கள் வருகைதந்து நீண்ட நேரம் காத்திருந்து சேவையினைப் பெற்றுச் செல்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விரு வங்கிகளுக்கும் இதுவரை காலத்திற்கும் ATM தானியங்கி சேவை இல்லாமையினால் பணவைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் செயற்பாட்டினை மேற்கொள்வதில் பல்வேறு இன்னல்களை எதிர் நோக்குவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வங்கிகளில் தோப்பூர், அல்லைநகர் கிழக்கு, அல்லைநகர் மேற்கு, பாலத்தோப்பூர், பட்டித்திடல், பள்ளிக்குடியிருப்பு, நல்லூர் மற்றும் பாட்டாளிபுற கிராம சேவையாளர் பிரிவினைச் சேர்ந்த பொதுமக்கள் சேவை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே, உரிய அதிகாரிகள் இவ்வங்கிகளுக்கு தானியங்கி சேவையினை அமைத்து பொதுமக்கள் இன்னல்களை நிவர்த்திக்குமாறு கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தோப்பூர் குறூப் நிருபர்