அக்கரைப்பற்று அனீஸ் மால் நிறுவனத்தின் பூரண அனுசரணையுடன் சூ சிற்றி விளையாட்டு கழகம் நடத்திய அனீஸ் மால் உள்ளக உதைபந்தாட்ட சம்பியன் கிண்ண தொடரில் கல்முனை சனிமௌண்ட் விளையாட்டு கழகத்தினர் வெற்றி பெற்று, பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அக்கரைப்பற்று அனீஸ் மால் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தொழிலதிபர் ஏ.சீ. அனீசிடம் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டனர்.
கடந்த வியாழக்கிழமை (21.12.2023) இரவு அக்கரைப்பற்று மாநகர புட்சால் மைதானத்தில் இடம்பெற்ற உள்ளக உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாட அக்கரைப்பற்று சூ சிற்றி விளையாட்டு கழகமும் கல்முனை சனிமௌண்ட் விளையாட்டு கழகமும் தகுதி பெற்றனர்.
இறுதிப் போட்டியின் முழுநேர முடிவில் இரு அணிகளும் தலா 4 கோல்களைப் பெற்றதை அடுத்து பொனால்டி சூட் அவுட் முறையில் சனிமௌண்ட் அணி வெற்றியீட்டியது.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்