Friday, May 3, 2024
Home » இரண்டு நாட்களில் இரண்டு குழந்தைகளை பெற்ற பெண்

இரண்டு நாட்களில் இரண்டு குழந்தைகளை பெற்ற பெண்

- மில்லியன் பேரில் ஒருவருக்கே இப்படி நிகழும்

by Rizwan Segu Mohideen
December 25, 2023 5:32 pm 0 comment

இரண்டு கருப்பைகளைக் கொண்டுள்ள அமெரிக்கப் பெண் ஒருவர், அடுத்தடுத்த நாட்களில் இரு குழந்தைகளை பெற்றுள்ளார். கருத்தரிக்கும் மில்லியன் பேரில் ஒருவருக்கே இப்படி நிகழும் எனக் கூறப்படுகிறது.

32 வயது கெஸ்லி ஹேட்சர் மொத்தம் 20 மணி நேரம் மகப்பேற்று வலியில் இருந்தார்.

பர்மிங்ஹமில் உள்ள அலபாமா பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் பிள்ளையையும் அதற்கு மறுநாள் இன்னொரு பிள்ளையையும் கெஸ்லி பெற்றெடுத்தார். இரண்டுமே பெண் குழந்தைகளாகும்.

கெஸ்லி ஏற்கனவே மூன்று பிள்ளைகளுக்குத் தாயாவார்.

2019 ஆம் ஆண்டு பங்களாதேஷ் பெண் ஒருவர் ஒரு மாத இடைவெளியில் தனது இரட்டை கருப்பைகளில் இரண்டு குழந்தைகளை பெற்றார் என்பது குறிப்படத்தக்கது .

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT