Monday, April 29, 2024
Home » முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்க அங்குரார்ப்பண நிகழ்வு

by mahesh
December 13, 2023 11:40 am 0 comment

முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவில் சதுரங்க விளையாட்டை இளம் சந்ததியினர் மத்தியில் ஊக்கப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இச்சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கத் தலைவராக சட்டத்தரணி எஸ்.தனஞ்செயன் தெரிவு செய்யப்பட்டதுடன், 15 பேர் அடங்கிய நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

1. சதுரங்கத்தின் கொள்கைகளையும் அது வாழ்க்கைக்கும் தீர்மானம் எடுப்பதற்கும் எவ்வாறு பங்களிக்கும் என்பதை கற்பித்தல்.

2. முல்லைத்தீவு மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் தூண்டுதல்

3. சதுரங்க கழகங்கள், சங்கங்கள் மற்றும் கல்விக்கூடங்களின் உருவாக்கத்தை ஊக்குவித்தல்.

4. முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை ஒழுங்கமைத்தல் அல்லது ஒருங்கிணைத்தல்.

5. இலங்கை மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் மாவட்ட வீரர்கள் பங்கேற்பதை எளிதாக்குதல்.

6. மதிப்பிடப்பட்ட விளையாட்டுகளில் செயற்றிறன் அடிப்படையில் சதுரங்க வீரர்களை தரப்படுத்துதல்

7. மேற்கூறியவற்றை அடைவதற்கு தேவையான அனைத்து நிர்வாக செயற்பாடுகளையும், நிதி திரட்டல் மற்றும் பிற செயற்பாடுகளையும் மேற்கொள்ளுதல் ஆகிய குறிக்கோள்களை 2024ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் இயங்குமெனவும் தெரிவிக்கப்பட்டது.

மாங்குளம் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT