236
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர், கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமக்கு கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து சோதனை நடத்திய போது, இச்சந்தேக நபர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இம்மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ். விசேட நிருபர்